2013ம் ஆண்டு கொலை, வழிப்பறி வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது

சோழிங்கநல்லூர்: 2013ம் ஆண்டு கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்ேபட்டை காரணி தோட்டம் 2வது ெதருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (23). இவர் கடந்த 19.9.2013ம் ஆண்டு 6 பேர் கொண்ட நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மூலக்கடை கொடுங்கையூர் மெயின் ரோடை சேர்ந்த தீபன் (எ) தீபன் சக்கரவர்த்தி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த 20.9.2013ம் ஆண்டு ராமநாதபுரத்தை சேர்ந்த வேலு (23) என்பவரை வழிமறித்து கத்திமுனையில் பணம் பறித்த வழக்கும் ரவுடி தீபன் சக்கரவர்த்தி மீது குமரன் நகர் காவல் நிலையத்தில் உள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த 2 வழக்குகளிலும் தீபன் சக்கரவர்த்தி நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கூட ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த பிப்ரவரி 5ம் தேதி நீதிமன்றம் தலைமறைவாக உள்ள ரவுடி தீபன் சக்கரவர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று குமரன் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடி தீபன் சக்கரவர்த்தியை பல நாட்கள் நோட்டமிட்டு நேற்று முன்தினம் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 2013ம் ஆண்டு கொலை, வழிப்பறி வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: