கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு கொலை மிரட்டல்

 

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் ஷரிபாபேகம் (48). இவர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது புதுவைக்கு வந்து தனது உறவினர்களை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வாணரபேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் ரமேஷ் (எ) மோகன் (38) என்பவர் இவரிடம் அவ்வப்போது என ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை ஷரிபாபேகம் கேட்டபோது, பிறகு தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் ஷரிபாபேகம் பிரான்ஸ் செல்லவிருப்பதால் ரமேஷிடம் கொடுத்த பணம் அனைத்தையும் திருப்பி கேட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் ஷரிபாபேகம் வீட்டுக்கு மோகன் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி பணம் கொடுக்க முடியாது, நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஷரிபாபேகம், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: