கட்டிலில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

 

ஈரோடு, மே 6: ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிப்பாளையம் வளந்தான் கோட்டையை சேர்ந்தவர் ரங்கராஜ் (54). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த மாதம் 29ம் தேதி ரங்கராஜ் வீட்டின் கட்டிலில் படுத்து இருந்தவர், கட்டிலில் இருந்து எழுந்திருக்க முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து மயங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ரங்கராஜை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிலில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: