இந்நிலையில், சாரதா துபாய்க்கு வேலைக்கு சென்ற போது, அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சிகாமணி (47) என்பவருடன் சாரதாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்போது, சாரதாவிற்கும், சிகாமணிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டு சாரதா கோவை திரும்பினார்.
சாரதாவை சமாதானம் செய்ய சிகாமணி கடந்த 21ம் தேதி கோவை வந்தார். அவரை, சாரதா தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது தியாகராஜன், நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதிபாண்டியன் கூட்டாளி புதியவன் என்பவரை கோவைக்கு வரவழைத்தார். பிறகு கடந்த 22ம் தேதி இரவு மது மற்றும் இறைச்சியில் 30க்கும் மேற்பட்ட தூக்க மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை கலந்து கொடுத்து சிகாமணியை கொலை செய்தனர். பின்னர் தியாகராஜன், சாரதா, புதியவன் ஆகிய 3 பேரும் சிகாமணி உடலை காரில் எடுத்து சென்று கரூர் பொன்னமராவதி அடுத்த கே.பரமத்திக்கு கொண்டு சென்று வீசினர். பின்னர் சாரதா விமானம் மூலம் துபாய் தப்பி சென்றார். மற்ற இருவரும் அவர்களது வீடு திரும்பினர்.
இந்நிலையில் சிகாமணியின் மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில் கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் தியாகராஜன் (69), புதியவன் (48), தியாகராஜன் கள்ளக்காதலி கோமதி (53), இவரது மகள்கள் நிலா (33), சாரதா (35) மற்றும் அவர்களின் உறவினர் ஸ்வாதி (26) ஆகியோர் சேர்ந்து சிகாமணியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாரதாவை தவிர 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை செய்து துபாய் தப்பி ஓடிய சாரதாவுக்கு அங்கிருந்த சிகாமணியின் நண்பர்கள், உறவினர்களால் ஆபத்து என பயந்து அவர் கோவை திரும்பி பின்னர் தலைமறைவானார். இந்நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சாரதாவை நள்ளிரவில் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி அதிரடி கைது appeared first on Dinakaran.