இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கணேசன், நண்பர் ஜெகதீசை அழைத்துக் கொண்டு ஜவகர் வீட்டிற்கு சென்று, அவரிடம் எனது மனைவியிடம் தனக்கும், அவளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தான் எழுதி வைத்திருந்த கடிதத்தை கொடுத்து கையெழுத்து வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஜவகர் அரிவாளை எடுத்து ஜெகதீசின் வலது காலில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து ஜவகரை கைது செய்தனர்.
The post கள்ளக்காதல் பஞ்சாயத்து தொழிலாளி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.