இதனிடையே மருத்துவமனையின் பெண் தூய்மைப்பணியாளர்கள், தூய்மை பணி மேற்கொள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு கழிவறையை தூய்மை செய்வதற்காக திறக்க முயன்ற போது திறக்க முடியவில்லை. வெகு நேரமாகியும் திறக்காததால், கதவை தட்டி உள்ளனர். ஆனால் எந்த பதிலும் வராததால் மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது, லாரா ரத்தம் தோய்ந்த ஆடையுடன் லேசாக மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை உடனே சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
கழிவறையை சோதனை செய்த போது, அங்குள்ள குப்பை பக்கெட்டில் பிறந்த குழந்தை இறந்து கிடந்துள்ளது. விசாரணையில், திருமணமாகாத லாரா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் மறைத்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் மருத்துமனைக்கு வந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி குறைமாதத்தில் பிறந்த சிசுவை கைகளால் அமுக்கி கொலை செய்துள்ளார். அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தை சேர்ந்த தம்பதி தேசிங்கு ராஜா – டெய்சி. இவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை லெமோரியா. தேசிங்கு ராஜாவின் உறவினர் சஞ்சய் (25). மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று குழந்தை லெமோரியாவுடன் சஞ்சய் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தையை இழுத்து சென்ற சஞ்சய், வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் வைத்து கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தலையை எடுத்து சென்று அப்பகுதியில் இருந்த ஊரணியில் வீசி விட்டு சென்றுள்ளார்.அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அரியலூர் ஜிஹெச் கழிவறையில் பிரசவம் சிசுவை கையால் அமுக்கி கொன்ற கொடூர பெண் appeared first on Dinakaran.