இவர் திருமணமாகி கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். அதே பெண் அஜித்குமார் வசிக்கும் பகுதி என்பதால் அவரும், அந்த பெண்ணுடன் நேரில் பேசி பழகி வந்தார். தான் காதலிக்கும் பெண்ணிடம் நீ ஏன் பேசுகிறாய், என கார்த்திக் கோபம் அடைந்தார். தான் பழகும் பெண்ணுடனான பழக்கத்தை உடனே விட்டு விட வேண்டும் என நண்பனை மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு அஜித்குமார் மறுத்துவிட்டார்.
தனது காதலியை அபகரிக்க முயலும் அஜித்குமாரை தீர்த்தக்கட்ட முடிவு செய்த கார்த்திக், தனது நண்பர்களான அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், அருண்குமார், வசந்த், வேலன், விக்ரம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். சம்பவத்தன்று அஜித்குமாரை மது குடிக்கலாம் என அழைத்துச் சென்று, அனைவரும் மது அருந்தியுள்ளனர். போதையில் இருந்தபோது அஜித்குமாரை அனைவரும் சரமாரியாக தலையில் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரை எட்டி உதைத்துள்ளனர். இதில் மயங்கி விழுந்த அஜித்குமாரை அங்கேயே போட்டு விட்டு அனைவரும் சென்று விட்டனர். இதில் அவர் இறந்து போனது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் மணிகண்டன், அருண்குமார், வசந்த், வேலன், விக்ரம் மற்றும் 17வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான கார்த்திக்கை பள்ளப்பட்டி போலீசார் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே கைது செய்துள்ளனர். சூரமங்கலம் போலீசார் கொலை வழக்கில் கார்த்திக்கையும் மீண்டும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ‘இன்ஸ்டா’ காதலியை அபகரித்ததால் வாலிபரை அடித்து கொன்ற நண்பன் appeared first on Dinakaran.