புதுடெல்லி: ஜார்கண்டில் தலைக்கு ரூ.1கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த நக்சல்கள் உட்பட 8 நக்சல்கள் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தின் லால்பனியா பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, நேற்று காலை 5.30 மணியளவில் லுகு மலைப் பகுதியில் பாதுகாப்புப் படைகளுக்கும், நக்சல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 8 நக்சல்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
The post ஒரு கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் உட்பட 8 பேர் என்கவுன்டரில் பலி appeared first on Dinakaran.