காட்டு யானைகள் அடிக்கடி விசிட் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு அனுமதி ‘கட்’

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. இத்தலமானது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், நாள்தோறும் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குவர். பேரிஜம் ஏரிப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறை அலுவலகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பேரிஜம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

முறையான அறிவிப்பு வனத்துறை சார்பில் வெளியிடப்படாததால், உள்ளூர் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் பேரிஜம் ஏரிப் பகுதியை காண முடியாமல் செல்கின்றனர். இதனை வனத்துறையினர் முறைப்படுத்தி பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிடும் நேரங்களில் உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

யானைகள் இந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு சென்றால் தான் பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மாதம் ஒரு முறையோ அல்லது 2 முறையோ இந்த பகுதிக்கு யானைகள் வருவது தற்போது வாடிக்கையாக மாறி வருகிறது. தினம்தோறும் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post காட்டு யானைகள் அடிக்கடி விசிட் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு அனுமதி ‘கட்’ appeared first on Dinakaran.

Related Stories: