இந்நிலையில், சில உற்பத்தி நிறுவனங்கள் ஐஸ்கிரீமில் கிரீம்களை உருவாக்க சலவை தூளையும், குளிர் பானங்களில் உரையை அதிகரிக்க பாஸ்போரிக் அமிலத்தையும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செலவை குறைப்பதற்காக சலவை தூள், யூரியா அல்லது ஸ்டார்ஸ் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக சுவை மற்றும் நிறத்தை மேம்படுத்த சாக்ரின் மற்றும் சாயக் கலவைகளையும் சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல உற்பத்தியாளர்கள் குடிக்க தகுதியற்ற தண்ணீரை ஐஸ்கிரீம் மற்றும் குளிர் பானங்களில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது. சலவை தூள் கலந்த ஐஸ்கிரீம்களை உட்கொள்ளும் போது தொண்டை, உணவு குழாய், வயிற்றில் காயங்கள் ஏற்படும் என்றும் இருமல், சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல பாஸ்போரிக் அமிலம் கலக்கப்படும் குளிர் பானங்களால் எலும்புகள் வலுவிழக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
The post ஐஸ்கிரீமில் சலவைத் தூள், குளிர்பானத்தில் பாஸ்போரிக் அமிலம் கலக்கப்படுவதாக புகார்: பெங்களூருவில் 97 நிறுவனங்ளுக்கு நோட்டீஸ்!! appeared first on Dinakaran.