புதுடெல்லி: கடந்த மாதம் 28ம் தேதி மியான்மரில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 3100 பேர் உயிரிழந்தனர். மியான்மருக்கு 442மெட்ரிக் டன் உணவு பொருட்களை ஒன்றிய அரசு கடந்த ஒன்றாம் தேதி அனுப்பி வைத்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான கப்பல் இந்த உணவு பொருட்களை கொண்டு சென்றது. இந்த உணவு பொருட்கள் மியான்மரில் உள் திலாவா துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது. இதில் 405மெட்ரிக் டன் அரிசி, 30மெட்ரிக் டன் சமையல் எண்ணெய், 5 மெட்ரிக் டன் பிஸ்கட் மற்றும் 2 மெட்ரிக் டன் நூடுல்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
The post மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவு பொருள் appeared first on Dinakaran.