இதையடுத்து சிறுவர்களை அழைத்து வந்த 3 ஏஜெண்டுகளிடம் விசாரித்தபோது, உத்திரபிரதேசத்தை சேர்ந்த சைலேஷ் ராஜ்பகர் (21), பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் (28), சுரேந்தர் ரவாத் (50) என்பதும், பீகார் மாநிலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவர்களில் ஆசைவார்த்தை கூறி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்து கேரளா, திருப்பூர், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்க இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட 9 சிறுவர்களை ராயபுரத்தில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்ட்ரல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பீகார் மாநிலத்திலிருந்து வேலைக்கு அழைத்து வந்த 9 சிறுவர்கள் மீட்பு: 3 ஏஜென்டுகள் கைது appeared first on Dinakaran.