இந்நிலையில் கடந்த 23ம் தேதி பாட்டி வீட்டில் தனியாக இருந்த சிறுமி தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், ‘சந்தோஷ் தன்னை காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்தார். நான் மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையாவும் சேர்ந்து என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டனர்’ என கூறியுள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ் (21), முத்தையா (20) ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே மருத்துவமனையில் நேற்று சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து கைதான இருவர் மீதும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதலிக்க மறுத்ததால் சிறுமி எரித்து கொலை appeared first on Dinakaran.