4 ரேஷன் கடைகள் திறப்பு

திருவொற்றியூர், மே 22: ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை இளைய முதலி தெரு, மீனம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக ரேஷன் கடைகள் கட்டி தரக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 4 நியாய விலை கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. மீனாம்பாள் நகர், இளைய முதலி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.65 லட்சம் செலவில் புதிதாக 4 ரேஷன் கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. இதை கலாநிதி வீராசாமி எம்பி நேற்று திறந்து வைத்தார்.

The post 4 ரேஷன் கடைகள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: