செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ரூ.2.50 கோடியில் கடைகள் மேற்கூரை அமைக்கும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

புழல், மே 23: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கடைகள், மேற்கூரை அமைக்கும் பணிகளை கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கடைகள் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, செங்குன்றம் – சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுக்கும் திட்டப் பணிகள், துரைசாமி ரெட்டி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி, நாரவாரிகுப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணியாற்றம் ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் மருத்துவ பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மைய கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அங்கிருந்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், கவுன்சிலர்கள் இலக்கியன், கார்த்திக் கோடீஸ்வரன், சகாதேவன், ரமேஷ், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ரூ.2.50 கோடியில் கடைகள் மேற்கூரை அமைக்கும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: