மாவட்டம் முழுவதும் 492 மி.மீ. மழை பதிவு

திருவள்ளூர், மே 22: தெற்கு ஆந்திரா – வட தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை சாரல் முதல் மிதமான மழையுடன் தொடங்கி
இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக திருவள்ளூரில் கத்திரி வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை நிலவரப்படி 492 மி.மீ. மழையும், சராசரியாக 32.80 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் அதிகபட்சமாக திருத்தணியில் 96 மி.மீ. மழையும், செங்குன்றத்தில் 77 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 2 மி.மீ. மழையும் பதிவாகி யுள்ளது. திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழைக்கு திருத்தணியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பள்ளிப்பட்டில் 17 மி.மீ., ஆர்கே பேட்டையில் 51 மி.மீ., சோழவரத்தில் 63 மி.மீ., பொன்னேரியில் 8 மி.மீ., ஜமீன்கொரட்டூரில் 32 மி.மீ., பூந்தமல்லியில் 13 மி.மீ., பூண்டியில் 40 மி.மீ., திருவள்ளூரில் 23 மி.மீ., ஊத்துக்கோட்டையில் 30 மி.மீ., ஆவடியில் 7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post மாவட்டம் முழுவதும் 492 மி.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: