அதனை தொடர்ந்து, கடந்த 12ம் தேதி மூன்றாம் முறையாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் மூலம் சீரியமுறையில் திட்டமிடப்பட்ட திடீர் செயலாக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூபாய் 951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் திருவா. மெட்ரோ எண்டர்பிரைசஸ் என்ற வணிக நிறுவனத்தை சென்னை-2 நுண்ணறிவுக் கோட்டப் பிரிவினர் ஆய்வு செய்து, ரூபாய் 12.46 கோடி அளவில் உள்ளீட்டு வரி போலியாக துய்த்து, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதை கண்டறிந்து, அதன் உரிமையாளர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் பஷீர் அகமது ஆகியோரை கடந்த 21ம் தேதி கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.
The post ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு போலி பட்டியல் வணிகர்கள் 318 பேர் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.