இவர்கள் ராமேஸ்வரம் பகுதியில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடலோர காவல்படை ரோந்து கப்பல் வந்து 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து, அதிலிருந்த 11 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 11 மீனவர்களையும் இலங்கை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுதலை செய்ய, இலங்கை அரசுடன், ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இநநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்தனர். பின்னர் தூதரக அதிகாரிகள், மீனவர்களை விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பினர். சென்னை விமான நிலையத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் 11 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்.
The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.