இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், பாதிக்கப்பட்டவர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததாகவும்,
தேவநாதன் அரசியல் பின்புலம் மற்றும் பண பலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தெரிவித்தார். இந்த நிலையில், தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கலாமா? என தேவநாதன் தரப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
The post நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கலாமா? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.