திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 58,872 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 23,523 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.3.71 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளன.
சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இந்நிலையில் விரைவில் பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்க உள்ள நிலையில் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது தரிசனத்திற்கு மேலும் நீண்ட நேரமாகும் என தெரிகிறது.
The post 18 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.