போதையில் தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு தொழிலாளி பலி: கொலை வழக்கில் வாலிபர் கைது

பல்லாவரம்: பம்மல், பசும்பொன் நகர், சக்கரபாணி தெருவை சேர்ந்தவர் இருதயராஜ் (50). கூலி தொழிலாளி. கடந்த 13ம் தேதி இரவு மது போதையில் இருந்த இருதயராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த டென் (எ) பிரவீன் (23) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் தாக்கிக் கொண்டனர். அப்போது பிரவீன், இருதயராஜை கீழே தள்ளி விட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த இருதயராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சங்கர் நகர் போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து, பிரவீனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போதையில் தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு தொழிலாளி பலி: கொலை வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: