தீபாவளியை முன்னிட்டு திமுகவினருக்கு புத்தாடை, இனிப்பு எம்எல்ஏ முருகேசன் வழங்கினார்

பரமக்குடி, அக்.25: பரமக்குடியில் நலிவடைந்த திமுகவினர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பேரூர், நகர் கழக கிளை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி சேர்ந்த நிர்வாகிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இணைப்புகளை முருகேசன் எம்எல்ஏ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், போகலூர் ஒன்றியக்குழு துணை தலைவர் பூமிநாதன்,நகர் மன்ற உறுப்பினர்கள் மாரியம்மாள் மும்மூர்த்தி,அப்துல்மாலிக், தேவகிட்டு,லண்டன் ரமேஷ், கிருஷ்ணவேணி பழனிகுமார், பிரபா சாலமன், ராதாபூசத்துரை, கருப்பையா மற்றும் நகர் கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தீபாவளியை முன்னிட்டு திமுகவினருக்கு புத்தாடை, இனிப்பு எம்எல்ஏ முருகேசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: