சட்ட உதவிகள் பெற கட்டணமில்லா தொலைபேசி

 

நீடாமங்கலம், அக். 25: நீடாமங்கலம் நீதிமன்றத்தில் தேதிய சட்டப்பணிகள் ஆணைகுழு சார்பில் பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா 15100 என்ற தொலைபேசி உதவி எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் இந்த இலவச சட்ட உதவியை பெறலாம் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சீத்தாலெட்சுமி வழங்கினார். அருகில் அரசு வழக்கறிஞர் சந்தோஷ் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளனர்.

The post சட்ட உதவிகள் பெற கட்டணமில்லா தொலைபேசி appeared first on Dinakaran.

Related Stories: