கும்பகோணம் ரயில் நிலையத்தில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

 

கும்பகோணம், அக். 25: கும்பகோணம் ரயில் நிலையத்தில் செல்போன் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (26). இவர் உழவர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை செல்ல கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கும்பகோணம் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவரை வழிமறித்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள சிவராஜின் செல்போனை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவராஜ் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் ரயில்வே போலீஸாருக்கு புகார் அளித்தார்.புகாரின்பேரில், கும்பகோணம் இருப்புப் பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் எஸ்.ஐ செந்தில்வேலன், எஸ்எஸ்ஐ ஜெகதீசன், தனிப்பிரிவு தலைமை காவலர் ஐயப்பன் உள்ளிட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் கும்பகோணம் முல்லை நகரை சேர்ந்த லாரன்ஸ் மகன் தாமஸ் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் பிரவீன் (24) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் இவர்கள் 2 பேரும் சிவராஜ் செல்போனை திருடியதும், இவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து கும்பகோணம் கிளை சிறையில் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர்.

The post கும்பகோணம் ரயில் நிலையத்தில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: