கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி, அக்.25: தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி பழைய கொக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பீத்து(50). கட்டிட தொழிலாளியான இவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம், சுவற்றுக்கு தண்ணீர் அடிக்க மின் மோட்டார் சுவிட்ச்சை போட்டார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பீத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: