வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி பகுதியில் புது பொலிவு பெற்ற நிழற் கூடங்கள்

சாமியார்மடம், அக்.24: சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. தொடர்ந்து இந்த நிழற் கூடங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிக்க பேரூராட்சித் தலைவர் ஜான் டென்சிங் முயற்சி எடுத்தார். அதன்படி நிழற்கூடங்கள் பராமரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டன. தற்போது அவை புது பொலிவுடன் காணப்படுகிறது. பராமரிக்கப்பட்ட நிழல் கூடங்கள் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு உதவிகரமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி பகுதியில் புது பொலிவு பெற்ற நிழற் கூடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: