முதலமைச்சர் போட்டியில் மாணவிக்கு 2 பதக்கம்

மதுரை, அக். 24: முதலமைச்சர் கோப்பை, பள்ளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரி அக்வாடிக் காம்ப்ளக்ஸ் நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில் மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி ரோஷிணி கலந்துகொண்டார். இவர் 100 மீ., பட்டர்பிளை பிரிவில் வெள்ளி பதக்கமும், 200 மீ., ஐ.எம்யில் வெள்ளி பதக்கமும் வென்றார். வெற்றிபெற்ற மாணவியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், இணைச்செயலாளர் கண்ணன், பள்ளி சேர்மன் மைக்கேல், தலைமை ஆசிரியர் ஸ்ரீலேகா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post முதலமைச்சர் போட்டியில் மாணவிக்கு 2 பதக்கம் appeared first on Dinakaran.

Related Stories: