முத்துப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

முத்துப்பேட்டை, அக்.26: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மங்கள் அன்பழகன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஹசினா பேகம் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான். மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். இதில் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 49 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: