பேராவூரணி ஒன்றியத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

 

பேராவூரணி, அக். 26: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் விழா பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் எம்பி முரசொலி தலைமை வகித்தார். எம்எல்ஏ அசோக்குமார், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பேராவூரணி ஒன்றியத்துக்குட்பட்ட 26 ஊராட்சிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 30 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.98 கோடி வங்கிக் கடன் வழங்கி எம்பி முரசொலி பேசினார் . நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அலிவலம் மூர்த்தி, இலக்கியா நெப்போலியன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுபசேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீத், தனபால் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி ஒன்றியத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: