உடையார்பாளையம் பேரூராட்சியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம்

 

ஜெயங்கொண்டம், அக். 26: அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதி நவீன எல்.இ.டி திரை வாகனத்தின் மூலம் முதலமைச்சர் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படங்கள் அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ், முதல் முறையே மறுப்போம். போதையை தவிர்ப்போம். மகிழ்ச்சி பாதையில் நடப்போம்.

என்ற கருத்தை மையமாகக் கொண்டு போதை பழக்கத்திற்கெதிரான விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இக்குறும்படத்தில் முதலமைச்சர் தோன்றி பேசியிருப்பதாவது, போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும். போதைப்பொருள் உங்கள் உடல் நலத்தை மட்டுமில்லை உங்களது குடும்பம் மற்றும் நாட்டின் நலனையும் சேர்ந்தே கெடுக்கும் எங்கேயும் எப்போதும் எல்லோருக்கும் எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் என பேசினார்.

The post உடையார்பாளையம் பேரூராட்சியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் appeared first on Dinakaran.

Related Stories: