எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் பலமுறை வலியுறுத்தி கடிதங்களை எழுதி வருகிறார்.

இந்த சூழலில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மீனவர்களிடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: