2026 தேர்தல் மட்டுமல்ல அதற்கு பிறகு வரக்கூடிய தேர்தல்களிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக என்றும் மக்கள் பணியில் இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்முடிப்பூண்டி முன்னாள் திமுக எம்எல்ஏ வேணு இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பொறாமையால் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துகளை கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமி கற்பனையில் இருந்தார் என நினைத்தால் ஜோசியராகவே மாறிவிட்டார். பழனிசாமி எப்போது ஜோசியராக மாறினார் என தெரியவில்லை. திமுக கூட்டணி தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல;

கொள்கைக்காக உருவான கூட்டணி. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல; மக்கள் கூட்டணியாகவும் உள்ளது. திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது. எங்கள் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம். மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார்; ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க வரமாட்டார் பழனிசாமி.எதிர்க்கட்சியாக இருந்தபோது மழையில் மக்களை சந்தித்தோம். மழை வந்ததும் நாள் சென்றேன்; துணை முதல்வர், எம்.எல்.ஏ. எம்.பிக்கள் சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்தனர். மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது திமுக அரசு. 2026 தேர்தல் மட்டுமல்ல; அதற்கு பிறகு வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக கூட்டணிதான் வெல்லும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 2026 தேர்தல் மட்டுமல்ல அதற்கு பிறகு வரக்கூடிய தேர்தல்களிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: