இதைத் தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்டது. அதன்படி, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் நடைபெற உள்ளது. வரிசை எண் 1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு ரூ.2.25 லட்சமும், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு ரூ.4 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு ரூ.5.60 லட்சமும், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு ரூ.3 லட்சமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் நாளை பகல் 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் மற்றும் ஏலம் அனைத்தும் தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் அருகில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் நடைபெற உள்ளது.
The post சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை!! appeared first on Dinakaran.