தங்கம் விலை புதிய உச்சம்.. சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் ரூ.60 ஆயிரத்தை தொட வாய்ப்பு..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,000ஐ நெருங்கியுள்ளது. தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனையானது. அதே மாதம் 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.56,000 தொட்டது.

அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7,280க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.58,240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இதையடுத்து நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.7,300க்கும் சவரனுக்கு ரூ.16 குறைந்து ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்து இருந்தது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.112க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் விலை புதிய உச்சம்.. சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் ரூ.60 ஆயிரத்தை தொட வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: