ஐப்பசி மாத முகூர்த்தத்தையொட்டி நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம்

சேலம், அக்.22: நேற்று ஐப்பசி மாத முகூர்த்தத்தையொட்டி, சேலம் கோயில்களில் திருமணம் செய்ய ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று காலை கோயில்களில் திருமண கோஷ்டியினர் குவிந்தனர். அர்ச்சகர் மந்திரங்கள் முழங்க திருமணஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. நேற்று மட்டும் சிவன், அம்மன், விநாயகர், முருகன், பெருமாள் கோயில்களில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர், கோட்டை பெருமாள், தாரமங்கலம் கைலாசநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், அம்மாப்பேட்டை செங்குந்தர் சுப்ரமணிய சுவாமி உள்பட மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

The post ஐப்பசி மாத முகூர்த்தத்தையொட்டி நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: