தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது

இடைப்பாடி, அக். 17: இடைப்பாடி அருகே உள்ள பக்கநாடு குண்டுமலைகாடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சு பையன்(46), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 13ம்தேதி குஞ்சுபையன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் ₹1.55 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றார். இதுகுறித்து குஞ்சுபையன் அளித்த புகாரின் பேரில், பூலாம்பட்டி இன்ஸ்பெக்டர் பேபி, எஸ்ஐ ராமசாமி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். நேற்று சந்தேகத்தின் பேரில், பக்கத்து வீட்டை சேர்ந்த ரங்கன் மகன் முருகன்(19) என்ற கட்டிட தொழிலாளியை போலீசார் காவல் நிலையத்துக்கு பிடித்து சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் குஞ்சுபையன் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது முருகன் என்பது உறுதியானது. இதையடுத்து அவரிடம் இருந்து 2 பவுன் செயின் மற்றும் ₹1.55 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். முருகனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: