3வது முறையாக ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலம், அக்.19: சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி சாணக்கியா(எ)ஜான்(31), 3வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொலை, வழிப்பறி வழக்கில் கைதான இவர் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் கிச்சிப்பாளையம் புதிய சுண்ணாம்பு சூளையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ₹5ஆயிரத்தை பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், துணை கமிஷனர் வேல்முருகன் ஆகியோர், போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினவுக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர், ரவுடி சாணக்கியா(எ) ஜானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

The post 3வது முறையாக ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: