பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்றவர் கைது

கெங்கவல்லி, அக். 18: கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில் போலீசார், நடுவலூர் பள்ளக்காடு வடக்குவீதி பகுதியில் உள்ள பீடா கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான குணசேகரன்(48) என்பவரை கைது செய்தனர்.

The post பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: