குடிநீர் குழாய் உடைந்த தகராறில் 5 பேர் கைது

சேலம், அக்.19: சேலம் ஆட்டையாம்பட்டி முத்தம்பாளையம் கோணக்காட்டை சேர்ந்தவர் ரமேஷ்(24). இவரது வீட்டின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதுகுறித்து அங்கிருந்த உறவினரான கோபாலகிருஷ்ணன்(28), அவரது தம்பி விஷ்ணு(21)ஆகியோரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ரமேஷ், நைனாம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணன், தம்பிகளான கோபாலகிருஷ்ணன், விஷ்ணு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல கோபாலகிருஷ்ணனும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில் ரமேஷ், அவரது தந்தை குமார் (46), தம்பி பிரகாஷ் (22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர்.

The post குடிநீர் குழாய் உடைந்த தகராறில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: