இன்ஜினியரை தாக்கி லேப்டாப் பறிப்பு

சேலம், அக்.19: திருவாரூர் குறவாசல் தெற்குமடை பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(24), இவர் சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் சாலை காண்டிராக்டரிடம் பில்லிங் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர் அலுவலக வேலையாக மதுரை சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் அதிகாலை 4.50 மணிக்கு மின்னாம்பள்ளி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, மின்னாம்பள்ளி சந்தை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த 3 பேர், இன்ஜினியர் கார்த்தியை திடீரென தாக்கிவிட்டு, செல்ேபான் மற்றும் லேப்டாப்பை எடுத்து தப்பி சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த கார்த்தி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இன்ஜினியரை தாக்கி லேப்டாப் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: