இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

சென்னை : 27 மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தை பின்பற்றும்போது தமிழ்நாடு பின்பற்றாமல் இருப்பதே நம் தனித்துவம் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் 27 மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தைப் பின்பற்றும் போது தமிழ்நாடு மட்டும் பின்பற்ற வில்லை என்று ஆளுநர் ஆதங்கப்படுகிறார்.இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம்.இன்னொரு தனித்துவமும் உண்டு.இதுவரையிலான 25 ஆளுநர்கள் போல் அல்லாமல் நீங்கள் மட்டும் சட்டத்தையும், தமிழ்நாட்டின் மாண்பையும் மதிக்கத்தவறுவதை சகித்துக்கொண்டிருப்பது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Related Stories: