வீடு புகுந்து திருடிய 4பேர் அதிரடி கைது

சேலம், அக்.11: சேலம் அம்மாபேட்டை வித்யாநகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்சினி. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, கடந்த 6ம்தேதி வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த 16 பவுன் நகை, ₹25 ஆயிரம், எல்இடி டிவி ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவை சேர்ந்த கச்சா(34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர் மீது 25க்கும் மேற்பட்ட திருட்டு, அடிதடி வழக்குகள் இருக்கிறது. விசாரணையில், இவர் கூட்டாளிகள் முன்னா(38), கண்ணன்(36) ஆகியோருடன் சேர்ந்து, பிரியதர்சினி வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் அதிரடியாக செய்தனர். இவர்களிடம் இருந்து 7 பவுன் நகையும், ₹15 ஆயிரம் பணமும் மீட்கப்பட்டது. இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கச்சாவின் தாய் மும்தாஜ் (62) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீடு புகுந்து திருடிய 4பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: