காந்தி பிறந்தநாளையொட்டி ஏரலில் நலத்திட்ட உதவி

ஏரல், அக்.5: ஏரலில் நடந்த காந்தி பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.எம்.பியூல்ஸ் இந்துஸ்தான் பெட்ரோலின் கார்ப்பரேஷன் சார்பில் பேரூராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்கள் 50 பேருக்கு இலவச சேலை மற்றும் வேஷ்டிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் துணைச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.எம். பியூல்ஸ் டீலர் பிரவீனா சுரேஷ்காந்தி, பிஎஸ்என்எல் முன்னாள் உதவி பொது மேலாளர் சுரேஷ்காந்தி, எஸ்.ம்.பியூல்ஸ் மேனேஜர் பெரும்படையான், சூப்பர்வைசர் மகேஷ் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post காந்தி பிறந்தநாளையொட்டி ஏரலில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: