தெற்கு சட்டமன்ற தொகுதி 34வது வார்டில் சாக்கடை கால்வாய் பாலம் அமைக்கும் பணி

 

திருப்பூர், அக். 18: திருப்பூர் மாவட்டத்தில் பருவமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி 34வது வார்டில் சாக்கடை கால்வாய் பாலம் அமைக்கும் பணி மற்றும் மழைநீர் தேங்கி நிற்காமல் வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். இதுபோல் 54 மற்றும் 57வது வார்டு வீரபாண்டி, ஜே.ஜே.நகர் பகுதிகளில் கனமழையின் காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். மேலும், தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த மக்களையும் சந்தித்து தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார். தெற்கு மாநகர செயலாளர் டிகேடி.மு.நாகராஜ். தெற்கு மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் செந்தில்குமார், கவுன்சிலர் கவிதா நேதாஜி கண்ணன், பகுதி செயலாளர் உசேன், வார்டு செயலாளர் இளங்கோ, மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தெற்கு சட்டமன்ற தொகுதி 34வது வார்டில் சாக்கடை கால்வாய் பாலம் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: