முன் தேதியிட்டு ஊதியத்தை வழங்க தூய்மை பணியாளர்கள் கோரிக்கை

 

ஈரோடு,அக். 18: கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தினக்கூலி தூய்மை பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு வழங்க பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி சுய உதவிக்குழு தினக்கூலி பணியாளர்கள் உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்கம்(ஏஐடியுசி) சார்பில், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், பேரூராட்சி சுய உதவிக்குழு தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட கலெக்டரும் நிர்ணயித்த 2024-2025ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியமான‌ நாளொன்றுக்கு ரூ562ஐ, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இதையடுத்து, செயல் அலுவலர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலான தொகையை அரியர்சாக வழங்குவதாக உறுதி அளித்தார். முன்னதாக, பேரூராட்சி அலுவலகம் அருகே ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி தலைமையில் தொழிலாளர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில், திரளான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post முன் தேதியிட்டு ஊதியத்தை வழங்க தூய்மை பணியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: