கஞ்சா விற்ற இளைஞர் கைது

தர்மபுரி, செப்.28: தர்மபுரி டவுன் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டுக்காரனூர் சுடுகாடு அருகில், கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, பழைய தர்மபுரியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சக்தி(27) என்பவர் கையில் வைத்திருந்த பையில் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்தியை கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற இளைஞர் கைது appeared first on Dinakaran.

Related Stories: