ஊத்தங்கரை, மே 22: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன்(45) மற்றும் அதிகாரிகள் கோவிந்தாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக லாரியில் வந்தவர், போலீசாரை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் லாரியில் சோதனையிட்டனர். அதில், 3 யூனிட் எம்.சாண்ட் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சிங்காரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதேபோல் மத்தூர் எஸ்எஸ்ஐ அன்பழகன் மற்றும் போலீசார் ஒத்தப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆனந்தன்(51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
The post எம்.சாண்ட் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.