கிருஷ்ணகிரி, மே 25: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை சிறப்பு உதவி தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள், குருபரப்பள்ளி ஜின்ஜூப்பள்ளி பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், கேட்பாரற்று டிப்பர் லாரி நின்றது. அதில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, 4 யூனிட் கற்களை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து லாரியின் உரிமையாளர், டிரைவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.