கிருஷ்ணகிரி, மே 22: கிருஷ்ணகிரி மாவட்டம். கெலமங்கலம் அருகே டி.தம்மாண்டரஅள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அலசெட்டி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ்(24) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த முனிராஜ், நிறுவனத்தில் இருந்த ரூ.52 ஆயிரம் மதிப்பிலான 51 கிலோ காப்பர் ஒயர்களை திருடிச் சென்றுள்ளார். அவரை, அங்கு மேலாளராக பணியாற்றி வரும் தனஞ்சயன் என்பவர் கையும் களவுமாக பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர். பின்னர் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையிலடைத்தனர்.
The post 51 கிலோ காப்பர் ஒயர் திருடிய ஊழியர் கைது appeared first on Dinakaran.