இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் மூதாட்டி உள்பட 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஞானவேல் மனைவி ரேவதி(35). இவர் கொத்தபேட்டா பகுதியைச் சேர்ந்த சுகந்தி(42) என்பவரிடம்,ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அதனை அவர் திருப்பி கொடுக்க வில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் சுகந்தி தனது உறவினர்களான சிவகாமி(60), அருண்(24), ஆர்த்தி(27) ஆகியோருடன் ரேவதியின் வீட்டுக்கு சென்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, சுகந்தி தரப்பினர் ரேவதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுகந்தி, சிவகாமி, அருண், ஆர்த்தி ஆகிய 4பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் மூதாட்டி உள்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: